"உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஆகாய் 2:23). இது உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம். தேவன், உங்களை அடையாளமாகவும் அற்புதமாகவும் வைக்கிறார். அவரது கரம், அவரது முத்திரையை உங்கள்மேல் போட்டு, நீங்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம் என்பதை காட்டுகிறது. அவர், "நீ என்னை தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், நான் உன்னை தெரிந்துகொண்டேன்," என்று கூறுகிறார். அவர் கனி கொடுக்கும்படி உங்களை தெரிந்துகொண்டிருக்கிறார். அந்தக் கனி நிலைத்திருக்கும்படி, நீங்கள் அவரது நாமத்தை சொல்லி கூப்பிடுகிறபோது, பிதாவுக்கு கேட்கும்படிக்கும், நீங்கள் எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும்படிக்கும் தெரிந்துகொண்டிருக்கிறார். நீங்கள் எவைகளையெல்லாம் கேட்கிறீர்களோ, அவற்றையெல்லாம் அவர் தருவார். இது உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம். ஆகவே, மகிழ்ச்சியோடு, "இயேசுவே, உமக்கு நன்றி. நீர் என் வாழ்வில் எல்லா ஆசீர்வாதத்திற்குமான அடையாளமாயிருக்கிறீர்; நான் உம்மை இந்த உலகத்திற்குக் கொண்டு செல்லும் அடையாளமாயிருக்கிறேன். அதற்கு நன்றி," என்று சொல்லுங்கள்.
ஓர் அருமையான சாட்சி இருக்கிறது. திருமதி அஜி அலெக்ஸ், காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.இ. கம்ப்யூட்டர் சயன்ஸ் எஞ்ஜினியரிங் படிக்க சேர்ந்தார். ஆரம்பத்தில் மிகவும் திணறினார். படிக்க போதுமான ஞானம் இல்லாததுபோல் உணர்ந்தார். சந்தேகங்கள் எழும்பின. நன்றாக முயற்சி செய்து படித்தும், முடியாமல் தான் தவறான படிப்பை தெரிந்தெடுத்துவிட்டோமோ என்ற கேள்வி எழும்பியது. பிறகு, காருண்யாவில் கொடுக்கப்பட்ட செய்தி அவர்கள் உள்ளத்தில் கிரியை செய்தது. அந்த செய்திகள், தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், பொறுமையாக இருக்கவும் அவர்களுக்குக் கற்பித்தன. அவர்கள் தன்னை ஆண்டவருக்கு முன்பாக தாழ்த்தி, "ஆண்டவரே, நான் என்னுடைய அறிவை நம்பி இருக்கமாட்டேன். உம்முடைய திட்டத்தையும், வழிகாட்டுதலையுமே நம்புவேன்," என்று கூறினார். அப்படி ஆண்டவரிடம் தன்னை சமர்ப்பித்த பிறகு, படிப்பை வெற்றிகரமாக முடித்தார்கள்.
இன்றைக்கு தேவன் அவர்களை கனப்படுத்தி, பெருகப்பண்ணியுள்ளார். ஆஸ்திரேலிய நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறையின் தொழில்நுட்ப தலைமை பொறுப்பில் அமர்த்தியுள்ளார். மாற்று திறனாளிகளுக்கு நன்றாக பணிபுரியும் காவல்துறை பெண் நிர்வாகியாக அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். காருண்யா, ஒவ்வொரு மாணவனுக்கும் மாணவிக்கும் இவ்வாறு மனித குல பிரச்னைகளை தீர்ப்பதற்கு பயிற்றுவிக்கிறது. நீங்களும் காருண்யா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தேசிய அளவில், சர்வதேச அளவில் தலைவராகி ஆசீர்வாதம் பெறலாம்.
அஜியைபோல நீங்களும் தேவனுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்தால், அவர் உங்களை மனுக்குலத்திற்கு தம் அன்பின் அடையாளமாக மாற்றுவார். இன்றைக்கு நீங்கள் இயேசுவின் மூலம் மொத்த மனுக்குலத்தின் பேரிலும் கரிசனையுள்ளவராக காணப்படுவீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என்னை உம்முடைய முத்திரை மோதிரமாக, உம்முடைய அதிகாரத்தின், தயவின், அன்பின் சின்னமாக வைப்பதாக கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் செய்த எந்தக் காரியத்தாலும் நீர் என்னை தெரிந்தெடுக்கவில்லை; உம்முடைய கிருபையினாலே தெரிந்துகொண்டீர் என்று அறிந்து என்னை தாழ்த்துகிறேன். உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை முத்திரியும்; உம் கரம் என் வாழ்வின்மீது அமர்ந்து நித்தியமான கனிகளை நான் கொடுப்பதற்கு அருள்புரியட்டும். இந்த உலகத்திற்கு உம்முடைய மகிமையையும் அன்பையும் வெளிக்காட்டும் அடையாளமாகவும் அற்புதமாகவும் என்னை பயன்படுத்தும். உம்முடைய வல்லமைக்கும் இரக்கத்திற்கும் வாழும் சாட்சியாக, ஆசீர்வாதத்தின் பாத்திரமாக என்னை மாற்றவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.